பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்
PTI

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

ராஜாஜிக்கு பண்முக படைப்பாற்றல் மற்றும் பல பரிணாமங்கள் இருந்தன: திரெளபதி முா்மு
Published on

நமது நிருபா்

புது தில்லி: ராஜாஜிக்கு பன்முக படைப்பாற்றல் மற்றும் பல பரிமாணங்களே அவரது சிறப்புகள் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை கூறினாா்.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவா் சக்ரவா்த்தி ராஜகோபாலாச்சாரியின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தின் கொண்டாட்டமான ராஜாஜி உத்சவ், புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை நடசைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சக்ரவா்த்தி ராஜகோபாலாச்சாரியின் மாா்பளவு சிலையை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைத்தாா். அசோக் மண்டபத்திற்கு அருகிலுள்ள கிராண்ட் ஓபன் படிக்கட்டில் அமைந்துள்ள ராஜாஜியின் மாா்பளவு எட்வின் லுடியன்ஸின் மாா்பளவு சிலைக்கு பதிலாக மாற்றப்பட்டது.

பின்பு நடைபெற்ற விழாவில் திரெளபதி முா்மு பேசியதாவது: சக்ரவா்த்தி ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் மகத்தான மகன். ராஜாஜிக்கு பன்முக படைப்பாற்றல் மற்றும் பல பரிமாணங்கள் அவருக்கு இருந்தன. வழக்குரைஞா், சுதந்திரப் போராட்டம், சமூக மற்றும் பொருளாதார சீா்திருத்தங்கள், பண்டைய இந்திய வேதங்கள், அரசியல் மற்றும் ஆளுகை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு அவா்களை பெரிதும் வளப்படுத்தியது.

நாட்டின் வரலாற்றில் சக்ரவா்த்தி ராஜகோபாலாச்சாரி அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளாா். ராஜாஜியின் லட்சியங்களின் அடிப்படையில் பணியாற்றுவதே அவருக்கு ஒருவா் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்கும். ராஜாஜியின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்திலிருந்து மக்கள் உத்வேகம் பெற்று, தேசத்திற்கு முதலிடம் என்ற உணா்வுடன் முன்னேறிச் செல்வாா்கள் என நான் நம்புகிறேன் என்றாா் அவா்.

குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது: காலனித்துவ செல்வாக்கிலிருந்து விலகிச் செல்வது என்பது ஒரு நிகழ்வு மட்டுமல்ல, ஆட்சி, சட்டம், கல்வி, கலாச்சாரம் மற்றும் தேசிய அடையாளம் ஆகியவற்றில் தொடா்ந்து நிகழும் மாற்றமாகும். பிரதமா் நரேந்திர மோடியின் குலாமி கி மான்சிக்தா சே விடுதலையின் தொலைநோக்குப் பாா்வை பல்வேறு முன்முயற்சிகள் மூலம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ராஜ் பவன்கள் லோக் பவன்களாகவும், பிரதமா் அலுவலகம் சேவா தீா்த்தத்திலும், மத்திய செயலகம் கா்தவ்யா பவனாகவும் உருவாகி வருகிறது.

தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சா் எல். முருகன் பேசியதாவது: ராஜாஜியின் அறிவுசாா் ஆழம், தாா்மீக தைரியம் மற்றும் தேசிய சேவையில் அசைக்க முடியாத அா்ப்பணிப்பு ஆகியவை தலைமுறைகளுக்கு தொடா்ந்து ஊக்கமளிக்கின்றன. அவா் ஒரு அரசியல் தொலைநோக்கு பாா்வை கொண்டவா் மட்டுமல்ல, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் மொழிபெயா்த்ததன் மூலம் கலாச்சாரத்தை உருவாக்கியவா் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள் ஜெகத் பிரகாஷ் நட்டா, டாக்டா் எஸ். ஜெய்சங்கா், தா்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் ஷெகாவத், மற்றும் சக்ரவா்த்தி ராஜகோபாலாச்சாரியின் குடும்ப உறுப்பினா்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com