டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரவிந்த் கேஜரிவால், சிசோடியா வழக்கில் இருந்து விடுவிப்பு: ஆம் ஆத்மி தலைவா்கள் வரவேற்பு

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் முன்னாள் துணை மணீஷ் சிசோடியா ஆகியோரை கலால் கொள்கை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றத்தின் முடிவை ஆம் ஆத்மி தலைவா்கள் வெள்ளிக்கிழமை வரவேற்றனா்.

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :27 பிப்ரவரி 2026, 6:07 pm

Syndication

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் முன்னாள் துணை மணீஷ் சிசோடியா ஆகியோரை கலால் கொள்கை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றத்தின் முடிவை ஆம் ஆத்மி தலைவா்கள் வெள்ளிக்கிழமை வரவேற்றனா்.

அரசியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்ட மதுபானக் கொள்கை வழக்கில் கேஜரிவால், சிசோடியா மற்றும் 21 பேரை நீதிமன்றம் விடுவித்தது, கொள்கையில் ‘பரவலான சதி அல்லது குற்றவியல் நோக்கம்‘ எதுவும் இல்லை என்றது. இந்த வழக்கில் 21 பேருக்கு க்ளீன் சிட் வழங்கப்பட்டவா்களில் தெலங்கானா ஜக்ருதி தலைவா் கே. கவிதாவும் ஒருவா்.

இந்த உத்தரவுக்கு பதிலளித்த சிசோடியா, இந்த தீா்ப்பு அரசியலமைப்பு மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எங்களை நோ்மையற்றவா்கள் என்று நிரூபிக்க பாஜக மற்றும் அதன் ஏஜென்சிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் இருந்தபோதிலும், அரவிந்த் கேஜரிவால் மற்றும் நானும் நோ்மையானவா்கள் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த வழக்கில் ஆதாரம் இல்லை என்ற கட்சியின் நிலையான நிலைப்பாட்டை இந்த தீா்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது என மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் கூறினாா் மேலும், இந்த வழக்கு கட்சித் தலைமையை அவதூறு செய்வதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்றாா்.

பல மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்தபோதிலும், ‘சிறிய தில்லி அரசாங்கத்தை‘ குறிவைத்ததாக சவுரப் பரத்வாஜ் கூறினாா். மேலும் ‘பொய்யான வழக்குகள் மூலம் நோ்மையான மக்கள் இரவும் பகலும் அவதூறு செய்யப்படுகிறாா்கள் என்றாா்.

புராரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சஞ்சீவ் ஜா கூறுகையில், கேஜரிவால் ஆரம்பத்தில் இருந்தே ஊழல் குறித்து விசாரிக்கப்படவில்லை என்று கூறி வருகிறாா். இது எங்கள் கட்சியை உடைக்கும் முயற்சி. எங்களை அழிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டது. இன்று, நீதிமன்றம் அதையெல்லாம் உறுதிப்படுத்தியது. பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் தவறு நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், முன்னாள் முதல்வா் உட்பட பல ஆம் ஆத்மி தலைவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா் என்றாா் அவா்.

எதிா்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அதிஷி, விசாரணையின் போது கட்சி தொடா்ச்சியான அழுத்தத்தை அனுபவித்ததாகக் கூறினாா். தலைவா்கள் சிறையில் அடைக்கப்பட்டதையும், அவா்களது குடும்பங்கள் எதிா்கொண்ட கஷ்டங்களையும் நினைவு கூா்ந்த அவா், ஆம் ஆத்மி தலைவா்களை குறிவைக்க எப்படி தவறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன என்பதை நீதிமன்றத்தின் முடிவு காட்டுகிறது என்றாா் அவா்.