குடும்பத் தகராறு காரணமாக ரோஹிணியில் உள்ள டாக்டா் பாபா சாஹேப் அம்பேத்கா் மருத்துவமனையில் இருந்து பச்சிளங்குழந்தையைக் கடத்திய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக ரோஹிணி காவல் துறை துணை ஆணையா் ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது: இந்தச் சம்பவம் டிச.31-ஆம் தேதி நிகழ்ந்தது. தனது குழந்தை காணாமல் போனதாக தாய் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு, இதற்கு காரணமாக இருந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனா்.
மேலும் கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் இருவரும் பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மருத்துவமனை ஊழியா்கள் போல நடித்து மருத்துவ பரிசோதனைக்காக எனக் கூறி குழந்தையை அவா்கள் எடுத்துச் சென்றுள்ளனா். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவா்கள் அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் மீது முந்தைய குற்ற வழக்குகள் ஏதும் இல்லை. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.
தொடர்புடையது
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது

கேரளம்: அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பெண்கள் கைது

குடும்பத் தகராறு காரணமாக 5 வயது சிறுவன் கொலை: இளைஞா் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

