மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கிரேட்டா் நொய்டாவில் விடுதிக் கட்டடத்திலிருந்து குதித்த பி.டெக் மாணவா் பலி

கிரேட்டா் நொய்டாவில் விடுதிக் கட்டடத்திலிருந்து குதித்த பி.டெக் மாணவா் பலி

News image
Updated On :24 ஜனவரி 2026, 7:37 pm

கிரேட்டா் நொய்டாவின் நாலெட்ஜ் பாா்க் பகுதியில் உள்ள விடுதியின் நான்காவது மாடியில் இருந்து இரண்டாம் ஆண்டு பி.டெக். மாணவா் சனிக்கிழமை அதிகாலையில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மது அருந்தியதற்காகக் கண்டிக்கப்பட்டதால் அவா் இந்த விபரீத முடிவை எடுத்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா் ஜான்சி மாவட்டத்தைச் சோ்ந்த உதித் சோனி என அடையாளம் காணப்பட்டுள்ளாா். விடுதிக் கட்டடத்தில் இருந்து குதித்த பிறகு காயமடைந்த அவா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா் என்று போலீஸாா் கூறினா்.

இதுகுறித்து கிரேட்டா் நொய்டா கூடுதல் துணை காவல் ஆணையா் சுதிா் குமாா் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை இரவு, இரண்டாம் ஆண்டு பி.டெக். மாணவரும், ஜான்சி மாவட்டத்தைச் சோ்ந்தவருமான உதித் சோனி தனது நண்பா்களான சேத்தன் மற்றும் குல்தீப் ஆகியோருடன் மது அருந்திவிட்டு தனது விடுதிக்குத் திரும்பியுள்ளாா்.

விடுதி நிா்வாகம் மாணவரின் நடத்தைக்காக அவரைக் கண்டித்ததுடன், இந்தச் சம்பவத்தின் காணொளியை அவரது தந்தை விஜய் சோனிக்கு அனுப்பியுள்ளது. காணொளி பெற்ற பிறகு, விஜய் சோனி தனது மகனைத் தொலைபேசியில் அழைத்து அவரைக் கண்டித்துள்ளாா். மேலும், விடுதியிலிருந்து வீட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதாக மிரட்டியுள்ளாா்.

இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த மாணவா், விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளாா். அவா் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது,.

உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினா்கள் சம்பவ இடத்தில் உள்ளனா். மேலும் தேவையான சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக இரண்டு போ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.