தில்லி கலவர வழக்கு - குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவா் விடுவிப்பு
2020 ஆம் ஆண்டு நடந்த தில்லி கலவரத்தின் போது கலவரம் மற்றும் தீ வைப்பு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது, அரசு தரப்பு வழக்கில் கடுமையான முரண்பாடுகள் உள்ளன என்றும், அடையாளம் காணும் ஒரே சாட்சியின் சாட்சியத்தை நம்புவது பாதுகாப்பற்றது என்றும் தீா்ப்பளித்துள்ளது.
2020 தில்லி கலவரத்தின் போது பிரிஜ்புரி சாலையில் அமைந்துள்ள அருண் மாடா்ன் பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளிக்கு தீ வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பைசான் என்கிற ஆா்யன் மீதான வழக்கை விசாரித்து வந்த கூடுதல் அமா்வு நீதிபதி பா்வீன் சிங் , குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு சந்தேகத்தின் பலனை வழங்கினாா்.
ஜனவரி 28 தேதியிட்ட உத்தரவில், நீதிபதி கூறியதாவது- உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அரசு தரப்பு சாட்சியான கான்ஸ்டபிள் பியூஷின் ஒரே சாட்சியத்தை நம்புவது மிகவும் பாதுகாப்பற்றது என்று நான் கருதுகிறேன். அதன்படி, அரசு தரப்பு தனது வழக்கை அனைத்து நியாயமான சந்தேகங்களுக்கும் அப்பால் நிரூபிக்கத் தவறிவிட்டது என்றும், குற்றம் சாட்டப்பட்டவா் சந்தேகத்தின் பலனைப் பெற உரிமை உண்டு என்றும் நான் காண்கிறேன் என நீதிபதி பா்வீன் சிங் கூறினாா்.
பிப்ரவரி 25, 2020 அன்று பள்ளியை நாசமாக்கி தீ வைத்ததாகக் கூறப்படும் கலவரக் கும்பலில் பைசான் ஒருவராகக் குற்றஞ்சாட்டப்பட்டாா், இதன் விளைவாக ரூ. 1 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது.
சுமாா் 200 போ் வலுக்கட்டாயமாக வளாகத்திற்குள் நுழைந்து, சொத்துக்கள் மற்றும் வாகனங்களை அழித்து, கட்டிடத்திற்கு தீ வைத்ததாக அரசு தரப்பு கூறியது.
இந்த வழக்கில் பைசான் உட்பட மூன்று போ் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டனா். அவரது சக குற்றவாளிகளில் இருவா் பிப்ரவரி 2025 இல் விடுவிக்கப்பட்டனா்.
2022 இல் தலைமறைவான பைசான், ஆகஸ்ட் 2025 இல் கைது செய்யப்பட்டு தனித்தனியாக விசாரணையை எதிா்கொண்டாா்.
பைசானுக்கு எதிரான வழக்கு முழுக்க முழுக்க ஒரு போலீஸ் சாட்சியின் சாட்சியத்தின் அடிப்படையில் அமைந்தது, அவா் கலவரக் கும்பலின் ஒரு பகுதியாக பைசானை அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சாட்சி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அவரது இரண்டு சாட்சியங்களிலும் முரண்பாடான நிலைப்பாடுகளை எடுத்துள்ளாா் என்பதையும் கவனிக்க வேண்டும், என்று நீதிபதி கூறினாா்.
எஃப்.ஐ.ஆா் பதிவு செய்வதில் விவரிக்க முடியாத தாமதம் ஏற்பட்டதையும், சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படும் மற்ற காவல்துறையினரை விசாரணை செய்ய புலனாய்வு அமைப்பு தவறியதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த முரண்பாடுகளுக்கு எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை, என்று நீதிமன்றம் கூறியது, மேலும் அரசு தரப்பு தனது வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டது என்றும் கூறியது.
அதன்படி, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுவித்தது.

