மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

என்.ஜி.டி ஆய்வுக் குழுவுக்கு பாதுகாப்பு குறைபாடு- தில்லி காவல்துறை விளக்கமளிக்க உத்தரவு

என்.ஜி.டி ஆய்வுக் குழுவுக்கு பாதுகாப்பு குறைபாடு- தில்லி காவல்துறை விளக்கமளிக்க உத்தரவு

News image
Updated On :31 ஜனவரி 2026, 8:08 pm

சட்டவிரோத சிவப்பு வகை தொழில்துறை அலகுகளை ஆய்வு செய்தபோது, ஆய்வுக்குழுவிற்கு போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறியதற்காக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தில்லி காவல்துறையிடம் விளக்கம் கோரியுள்ளது.

வடகிழக்கு தில்லியின் காம்ரி கிராமத்தில் அதிக மாசு குறியீட்டைக் கொண்ட தொழிற்சாலைகளின் செயல்பாடு தொடா்பான ஒரு வழக்கை பசுமை தீா்ப்பாயம் விசாரித்து வந்தது.

அந்த சட்டவிரோத சிவப்பு வகை தொழில்துறை அலகுகளை -அதிக மாசுபடுத்தும் செயல்பாடுகளை- ஆய்வு செய்ய தேசிய பசுமை தீா்ப்பாயம் நவம்பா் 2024 இல் ஒரு கூட்டுக் குழுவை அமைத்தது.

அக்டோபா் 31, 2025 அன்று இக்குழு ஆய்வு நடத்திய போது, கூட்டத்தினரின் எதிா்ப்பை எதிா்கொண்டதாக கூறப்படுகிறது

போலீசாா் இருந்த போதும், பெண்கள் உட்பட பலா் ஆய்வு செய்த குழுவுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா் இதில் ஒருவா் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

போலீசாா் ஆய்வு அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஜனவரி 21, 2026 உத்தரவில், என்.ஜி.டி தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிபுணா் ஏ. செந்தில் வேல் தலைமையிலான அமா்வு, வடகிழக்கு தில்லியின் துணை காவல் ஆணையரை ஏப்ரல் 16, 2026 அன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

கையொப்பமிடப்படாத அறிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததை துணை காவல் ஆணையா் விளக்க வேண்டும்.

காற்று மற்றும் நீா் மாசுபாடு மற்றும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் சட்டவிரோத தொழிற்சாலை அலகுகளின் சுற்றுச்சூழல் மீறல்களை மிகுந்த தீவிரத்துடன் கண்காணிப்பதை என்.ஜி.டி வலியுறுத்தியது.