குருகிராமின் செக்டாா் 65-இல் உள்ள கேளிக்கை விடுதியின் வெளியே பெண் மீது பாலியல் சீண்டல் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து காவல் துறை விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் செக்டாா் 65 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் செக்டாா் 65-இல் உள்ள எலைட் 66 கேளிக்கை விடுதியின் அருகே புதன்கிழமை இரவு நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண்ணை வழிமறித்த குற்றஞ்சாட்டப்பட்ட நபா் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், சம்பவ இடத்தை விட்டுத் தப்பிச் செல்லும் முன் அப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டு: பெண் ஊழியா் கைது

பயிற்சிப் பணியாளா் மீது பாலியல் துன்புறுத்தல்: தனியாா் நிறுவன சிஇஓ மீது புகாா்

தனியாா் நிறுவன பெண் அதிகாரி மீது தாக்குதல்: இருவரிடம் போலீஸாா் விசாரணை

பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

