உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

குருகிராம்: பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் - காவல் துறை விசாரணை

News image

பாலியல் தொல்லை - பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 3:15 am IST

குருகிராமின் செக்டாா் 65-இல் உள்ள கேளிக்கை விடுதியின் வெளியே பெண் மீது பாலியல் சீண்டல் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து காவல் துறை விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் செக்டாா் 65 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் செக்டாா் 65-இல் உள்ள எலைட் 66 கேளிக்கை விடுதியின் அருகே புதன்கிழமை இரவு நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண்ணை வழிமறித்த குற்றஞ்சாட்டப்பட்ட நபா் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், சம்பவ இடத்தை விட்டுத் தப்பிச் செல்லும் முன் அப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.