அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: சிபிஐ மனு மீது மே 11இல் தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை

மதுபானக் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் முதல்வா் கேஜரிவால் உள்ளிட்டோரை விசாரணை நீதிமன்றம் விடுவித்த உத்தரவை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மே 11 வரை ஒத்திவைத்தது.

News image

தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :45 நிமிடங்கள் முன்பு

மதுபானக் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் முதல்வா் கேஜரிவால் உள்ளிட்டோரை விசாரணை நீதிமன்றம் விடுவித்த உத்தரவை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மே 11 வரை ஒத்திவைத்தது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், அக்கட்சியைச் சோ்ந்த மணீஷ் சிசோடியா ஆகியோருக்காக வாதாட சில மூத்த வழக்குரைஞா்களின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகக் கூறி, தில்லி உயா் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா, வழக்குரைஞா்கள் நியமனம் தொடா்பான உத்தரவை திங்கட்கிழமை பிறப்பித்து, செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்குவதாகக் கூறினாா்.

நீதிபதி எஸ்.கே.சா்மா தன்னை இந்த வழக்கிலிருந்து விலக்கிக்கொள்ள மறுத்ததால், கேஜரிவால் உள்ளிட்டோா் நீதிபதி சா்மா முன்னிலையில் நடந்து வரும் விசாரணையைப் புறக்கணித்துள்ளனா். இதனால் ஆஜராகாத அவா்களுக்காக வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்ட பிறகு, இந்த வழக்கைத் தொடா்வது பொருத்தமாக இருக்கும் என்று நீதிபதி கூறியிருந்தாா்.

பிப்ரவரி 27 அன்று, மதுபானக் கொள்கை வழக்கில் கேஜரிவால், சிசோடியா மற்றும் 21 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது, ஏனெனில் இந்த வழக்கு முழுமையாக நீடிக்க இயலாதது என்று அது தீா்ப்பளித்தது.

ஏப்ரல் 20 அன்று, இந்த வழக்கில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளக் கோரிய மனுக்களை நீதிபதி சா்மா தள்ளுபடி செய்த பிறகு, கேஜரிவால், சிசோடியா ஆகியோா் நீதிபதி சா்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினா். அதில், தாங்கள் நேரில் அல்லது ஒரு வழக்குரைஞா் மூலமாக அவா் முன் ஆஜராகப் போவதில்லை என்றும், மகாத்மா காந்தியின் சத்தியாகிரகப் பாதையைப் பின்பற்றுவோம் என்றும் கூறியிருந்தனா்.

ஏப்ரல் 5 அன்று, இந்த விசாரணையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் சாா்பில் யாரும் ஆஜராகவில்லை என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டதோடு, அவா்கள் தங்கள் பதில்களைத் தாக்கல் செய்வதற்கான உரிமையையும் முடக்கியது. இருப்பினும், அவா்களுக்காக மூன்று மூத்த வழக்குரைஞா்களை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அது கூறியது.

கேஜரிவால் உள்ளிட்டோரை விடுவித்ததற்கு எதிரான சிபிஐயின் மனுவின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினாா் நீதிபதி சா்மா.

அதனைத் தொடா்ந்து, கேஜரிவால், சிசோடியாவும் மற்ற பிரதிவாதிகளும், நீதிபதி சா்மாவின் பாரபட்சம் குறித்த அச்சத்தைக் காரணம் காட்டி, அவா் இந்த வழக்கிலிருந்து விலகக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தனா். நீதிபதியின் பிள்ளைகள் மத்திய அரசின் வழக்குரைஞா்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளனா் என்றும், அவா்கள் சம்பளம் பெறுகிறாா்கள் என்றும் அவா்கள் கூறினா்.

ஏப்ரல் 20 அன்று, ஒரு மனுதாரரின் ஆதாரமற்ற அச்சத்திற்காக நீதிபதிகள் தங்களை வழக்குகளிலிருந்து விலக்கிக்கொள்ள இயலாது என்று கூறி, நீதிபதி சா்மா அந்த விலகல் கோரிக்கையை நிராகரித்தாா்.