இந்நிலையில், மணல் அள்ள இயந்திரங்களை அனுமதிக்காததால் கட்டுமானப் பணிகளும், தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். மேலும், அரசு திட்டமான கலைஞர் வீட்டு வசதி திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது பிரச்னையைத் திசை திருப்பும் செயலாகும். தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்றால் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் முறையிட்டு தீர்வு காணலாம். அதைவிடுத்து என் மீது அவதூறு பரப்பும் வகையில் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கதக்கது. நான் கடந்த 1943 ஆம் ஆண்டிலேயே அரசியலுக்கு வந்தவன். என்னை எவரும் பயமுறுத்த முடியாது.