4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஜன. 16 சென்னை சிறப்பு ரயிலில் முன்பதிவு 10 நிமிடத்தில் முடிந்தது

திருநெல்வேலி, ஜன. 8:  பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் இருந்து ஜன. 16-ம் தேதி சென்னைக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கிய 10-வது நிமிடத்தில் முடிந்தது.  பொங்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருநெல்வேலி, ஜன. 8:  பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் இருந்து ஜன. 16-ம் தேதி சென்னைக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கிய 10-வது நிமிடத்தில் முடிந்தது.

 பொங்கலையொட்டி தெற்கு ரயில்வே சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. ரயில் எண் (06103) சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 15-ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக திருநெல்வேலிக்கு மறுநாள் பகல் 12.15 மணிக்கு வருகிறது.

 இதே ரயில் (எண் 06104) ஜன. 16-ல் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு மதுரை, திருச்சி, விருத்தாசலம் வழியாக மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது.

 இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது. பொங்கல் பண்டிகை முடிந்த மறுநாள் அதாவது ஜன. 16-ம் தேதி சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும், பஸ்களிலும் டிக்கெட் இல்லை என்பதால், பயணிகள் இந்த ரயிலுக்கு முன்பதிவு செய்ய திருநெல்வேலி ரயில் நிலையத்தில் முந்தைய நாள் இரவே காத்திருந்தனர்.

  முன்பதிவு மையம் திறக்கும் முன் காலையில் வரிசையில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு 10-வது நிமிடத்தில் முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த 4-வது நிமிடத்தில் காத்திருப்போர் பட்டியலில் 397 பேருடன் முன்பதிவு செய்வது முடிக்கப்பட்டது. இதனால் வரிசையில் நின்ற 90 சதவிகிதம் பேர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சென்னைக்கு ஏ.சி. ரயில்: திருநெல்வேலியில் இருந்து ஜன. 13 பிற்பகல் 2.55 மணிக்கு 3 அடுக்கு குளிர்சாதன வசதியுடன் 13 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயில் புறப்பட்டு சென்னை எழும்பூர் வழியாக சென்ட்ரலை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு அடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவும் சனிக்கிழமை தொடங்கியது. பொங்கலுக்கு முன் இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்படுவதால் பயணிகள் முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

  தற்போது இந்த ரயிலில் 531 குளிர்சாதனப் படுக்கைகள் காலியாக உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.