அம்பாசமுத்திரம், பிப். 8: திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு அருள்மிகு சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலில் தைப்பூச தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இத்திருவிழா ஜனவரி 29 ம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. திங்கள்கிழமை இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி சிவசைலத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் விநாயகர் கோயிலுக்கு வந்தடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாள் கேடயத்தில் எழுந்தருளி தர்மபுர ஆதீன மடத்திற்கு வந்தடைந்தனர். அங்கு ருத்ர ஏகாதசி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் இரவு சுவாமி, அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வாணவேடிக்கை, சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
புதன்கிழமை தீபாராதனை, கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து சுவாமி - அம்பாள் எழுந்தருளி சிவசைலம் கோயிலுக்குச் சென்றனர். விழா ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டியினர், ஆழ்வார்குறிச்சி வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சூர்யவன்ஷி பராக்...பராக்!

கா்நாடக அமைச்சரவை அமைக்க ஆலோசனை: டி.கே.சிவகுமாா், சித்தராமையா தில்லியில் முகாம்

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது: மல்லிகாா்ஜுன காா்கே

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.94 லட்சம் கோடி: 3.2% அதிகரிப்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


