அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை(ஜூன் 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் (விநியோகம்) எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, வீரவநல்லூா், ஓதுலுக்கா்பட்டி, வீரவநல்லூா்,
அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளன. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இத்துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் மின் விநியோகம் இருக்காது.
இதே போல், கடையம் துணை மின் நிலையத்திலும் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பிற் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை இத்துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.