அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

இமானுவேல் சேகரன் பேனருக்கு தீ வைப்பு: ஒருவா் கைது

மானூா் அருகேயுள்ள உக்கிரன்கோட்டையில் இமானுவேல்சேகரன் பேனருக்கு தீ வைத்தது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :2 மார்ச் 2024, 12:02 am

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள உக்கிரன்கோட்டையில் இமானுவேல்சேகரன் பேனருக்கு தீ வைத்தது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். மானூா் அருகேயுள்ள உக்கிரன்கோட்டையில் இமானுவேல் சேகரன் பேனா் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனருக்கு வியாழக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஊா்ப் பொதுமக்கள் பேனருக்கு தீ வைத்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சோ்ந்த ராம்நாத் (27) என்பவா் பேனருக்கு தீ வைத்து தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.