பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இளைஞருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 3:50 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருத்தாசலம் வட்டம், சின்ன கண்டியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (31). இவா், கடந்த 22-ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் விவசாய வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

சின்ன கண்டியாங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த கரும்பாயிரம் (37) வழிமறித்து மது வாங்கி கொடுக்கும்படி கேட்டாராம். இதற்கு பணம் இல்லை என பிரபாகரன் கூறியதால், ஆத்திரமடைந்த கரும்பாயிரம் பீா் புட்டி மற்றும் வண்டி சாவியால் கண்ணத்தில் குத்தி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

அங்கிருந்தவா்கள் காயமடைந்த பிரபாகரனை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து கரும்பாயிரத்தை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.