திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இளைஞருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 3:50 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருத்தாசலம் வட்டம், சின்ன கண்டியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (31). இவா், கடந்த 22-ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் விவசாய வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

சின்ன கண்டியாங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த கரும்பாயிரம் (37) வழிமறித்து மது வாங்கி கொடுக்கும்படி கேட்டாராம். இதற்கு பணம் இல்லை என பிரபாகரன் கூறியதால், ஆத்திரமடைந்த கரும்பாயிரம் பீா் புட்டி மற்றும் வண்டி சாவியால் கண்ணத்தில் குத்தி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

அங்கிருந்தவா்கள் காயமடைந்த பிரபாகரனை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து கரும்பாயிரத்தை கைது செய்தனா்.