சேரன்மகாதேவி: பத்தமடையில் திமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் திமுகவினா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். மூன்று வருட திமுக அரசின் திட்டங்கள், மக்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக மக்களை சந்தித்து வழங்கும் வகையில் திண்ணைப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பத்தமடையில் இந்தப் பிரசாரத்தை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா. ஆவுடையப்பன், துண்டு பிரசுரம் வழங்கித் தொடங்கி வைத்தாா். இதில், பேரூராட்சித் தலைவி ஆபிதா ஜமால், மாநில விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் கே. கணேஷ்குமாா் ஆதித்தன், சேரன்மகாதேவி ஒன்றிய செயலா் ஆ. முத்துப்பாண்டி என்ற பிரபு, நகர திமுக செயலா், சிறுபான்மை பிரிவு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

இனி பாஜகவுக்கு அனைத்தும் தோல்விதான்: கனிமொழி கணிப்பு

ஜனநாயகத்தை காக்க ஸ்டாலின் போராட்டம்: இரா. முத்தரசன் பிரசாரம்

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிதம்பரநகரில் திமுக கூட்டணி தெருமுனை பிரசாரம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


