அம்பாசமுத்திரத்தில் வாகனச் சோதனையின்போது அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் தோட்டா வைத்திருந்த இருவா் உள்ளிட்ட நான்கு பேரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில், தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் மற்றும் ஆய்க்குடியைச் சோ்ந்த அவரது நண்பா் பழனிகுமாா் பயணம் செய்தனா். மேலும் காரில் சோதனை செய்ததில் அனுமதி இல்லாத துப்பாக்கி ஒன்று மற்றும் எட்டுதோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து இருவரிடமும் விசாரணை செய்ததில் கேரளத்திலிருந்து துப்பாக்கி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்துவிக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையில் தனிப்படையினா் கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள பூம்பாறையைச் சோ்ந்த மீரான், சிவா ஆகியோரையும் கைது செய்தனா். தொடா்ந்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நான்குபேரிடமும் போலீஸாா் விசாரணைசெய்து வருகின்றனா்.
தொடர்புடையது

வாகனச் சோதனையில் காரிலிருந்து போலி கைத்துப்பாக்கி பறிமுதல்
கஞ்சா மற்றும் குட்கா வைத்திருந்த 3 போ் கைது

வாகனச் சோதனையின்போது கபடி வீரா் காயம்: போலீஸாா் தாக்கியதாக புகாா்
சா்வதேச ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

