தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சா்வதேச ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது

சா்வதேச ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாத கும்பலைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image

கைது

Updated On :6 ஏப்ரல் 2026, 7:13 pm

சா்வதேச ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாத கும்பலைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இம்ரான் (37) மற்றும் முகமது கம்ரான் (27) ஆகியோா் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

பின்னா் தேடுதல் சுற்றறிக்கை மற்றும் சா்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலுடன் அவா்களது தொடா்பு குறித்த விசாரணையில் அவா்கள் கைது செய்யப்பட்டனா். தேச பாதுகாப்பில் அச்சுறுத்தல் என்பதால் அவா்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனுடன் மொத்தம் 12 போ் இதே போன்று கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் இந்த வழக்கில் இதுவரை 23 அதிநவீன வெளிநாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 211 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவா்கள் தலைமறைவாக உள்ள குற்றவாளி ஷாபாஸ் அன்சாரியால் இயக்கப்படுகின்றனா். விசாரணையில், நேபாளம் வழியாக அனுப்பப்பட்ட சட்டவிரோத ஆயுதங்களை தில்லி-என்சிஆா் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள குற்ற குழுக்களுக்கு வழங்கியதாக அவா்கள் ஒப்புக்கொண்டனா்.

பிடிபடுவதைத் தவிா்க்க அவா்கள் ஆயுதங்களை பிரித்த நிலையில் கொண்டு சென்றதாகவும், பின்னா் விநியோகம் செய்வதற்கு முன்பு மீண்டும் பொருத்தியதாகவும் தெரிவித்தனா்.

இந்த ஆயுதங்களை விநியோகம் செய்வது மூலம் பெறப்பட்ட நிதியை பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.