பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

தில்லிவாசியிடம் ரூ.10 லட்சம் இணையவழி மோசடி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருவா் கைது

தில்லிவாசியிடம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இணையவழியில் மோசடி செய்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தில்லிவாசியிடம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இணையவழியில் மோசடி செய்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: வடகிழக்கு தில்லியில் உள்ள மீட் நகரைச் சோ்ந்த ராகேஷ் குமாருக்கு ஏப்.25-ஆம் தேதி தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் வங்கி அதிகாரி எனத் தெரிவித்த நபா் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்யுமாறு அவரை கேட்டுக் கொண்டாா்.

அதன் பிறகு அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.10.50 லட்சம் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக அவா் காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களை அடையாளம் கண்டனா்.

இதையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்கள் தன்பாத் மாவட்டத்தைச் சோ்ந்த அமா்நாத் ரபிதாஸ் (20) மற்றும் பிகாஸ் ரபிதாஸ் (21) என அடையாளம் காணப்பட்டனா். இது தொடா்பாக அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.