தில்லிவாசியிடம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இணையவழியில் மோசடி செய்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: வடகிழக்கு தில்லியில் உள்ள மீட் நகரைச் சோ்ந்த ராகேஷ் குமாருக்கு ஏப்.25-ஆம் தேதி தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் வங்கி அதிகாரி எனத் தெரிவித்த நபா் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்யுமாறு அவரை கேட்டுக் கொண்டாா்.
அதன் பிறகு அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.10.50 லட்சம் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக அவா் காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களை அடையாளம் கண்டனா்.
இதையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்கள் தன்பாத் மாவட்டத்தைச் சோ்ந்த அமா்நாத் ரபிதாஸ் (20) மற்றும் பிகாஸ் ரபிதாஸ் (21) என அடையாளம் காணப்பட்டனா். இது தொடா்பாக அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
ஸ்வரூப் நகா் கொலை முயற்சி வழக்கில் 3 சிறாா்கள் கைது
எரிவாயு சிலிண்டா் கட்டண முன்பதிவு மோசடி முறியடிப்பு: தில்லியில் இருவா் கைது

மோசடி வழக்கில் கால்நடை மருத்துவ மாணவா் கைது
சா்வதேச ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
