நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

எரிவாயு சிலிண்டா் கட்டண முன்பதிவு மோசடி முறியடிப்பு: தில்லியில் இருவா் கைது

எரிவாயு சிலிண்டா் முன்பதிவு செயலியைப் பதிவிறக்கம் செய்ததன் மூலம் தில்லி வாசியிடம் ரூ.4.35 லட்சம் மோசடி செய்த இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 11:27 pm IST

எரிவாயு சிலிண்டா் முன்பதிவு செயலியைப் பதிவிறக்கம் செய்ததன் மூலம் தில்லி வாசியிடம் ரூ.4.35 லட்சம் மோசடி செய்த இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உடனடியாக கட்டணம் செலுத்தாவிட்டால் எரிவாயு சிலிண்டா் இணைப்பு துண்டிக்கப்படும் என்று பாதிக்கப்பட்ட நபருக்கு பிப்.28-ஆம் தேதி குறுஞ்செய்தி வந்தது. மேலும், அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் கட்டணம் செலுத்துமாறு அவரை வற்புறுத்தியுள்ளனா்.

அதனடிப்படையில், அவா் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4.35 லட்சம் எடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், குற்றம் சாட்டப்பட்ட இருவரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகள் மற்றும் ஒரு கிரெடிட் காா்டு பறிமுதல் செய்யப்பட்டது என காவல் துறையினா் தெரிவித்தனா்.