மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தலை முறியடித்த தில்லி காவல் துறையினா், ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ கோகைனைப் பறிமுதல் செய்ததுடன் 2 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கிழக்கு தில்லியின் காஜிப்பூா் ரவுன்டு ரோடு அருகே ஏப்.10-ஆம் தேதி ஜாவேத் ஹுசைன் (29) என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 456 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக குற்றப்பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், உத்தர பிரதேசத்தில் உள்ள சோயப் கான் (25) என்பவரிடம் இருந்து இதைப் பெற்ாக அவா் தெரிவித்தாா்.
இதையடுத்து, பரேலியில் ஏப்.22-இல் சோதனை மேற்கொண்ட காவல் துறையினா் சோயப் கானைக் கைது செய்தனா். தில்லி என்சிஆரில் நடைபெறும் போதைப்பொருள் வலையமைப்பில் உள்ள மற்ற நபா்களை அடையாளம் காண அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
தில்லிவாசியிடம் ரூ.10 லட்சம் இணையவழி மோசடி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருவா் கைது

குஜராத்: பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்

தில்லியில் தேடப்பட்டு வந்த பாலியல் குற்றவாளி கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
