ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

வெளிப்புற தில்லியில் பெண் சடலம் மீட்பு: மூவா் கைது

வெளிப்புற தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், 35 வயது பெண்ணின் உடல் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 8:51 pm

வெளிப்புற தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், 35 வயது பெண்ணின் உடல் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஏப்.7-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணமான பெண் ஒருவா், குற்றஞ்சாட்டப்பட்ட தீபக் (22) என்பவருடன் விடுதிக்குச் சென்றுள்ளாா். அவா்களுடன் சுரேந்தா் மற்றும் ஜோகிந்தா் ஆகியோரும் சம்பவத்தின்போது அறைக்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மூவரும் விடுதியை விட்டு வெளியேறியதும் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் விடுதி அறையின் படுக்கை சேமிப்பு பெட்டிக்குள் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்கள் மற்றும் நெற்றியில் காயங்களுடன் பெண்ணின் சடலம் கிடப்பதைக் கண்டனா். அந்த மூவரும் சோ்ந்து பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, அவா்கள் மூவரும் காவல் துறையினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களின் கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.