தில்லியில் 12-ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபா் புராரி பகுதியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: நந்த் நாகரி காவல் நிலையத்தில் 2014-இல் பதிவு செய்யப்பட்ட வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கொலை வழக்கில் குலாப் சிங் (எ) விக்கி (42) குற்றவாளி என அறிவிக்கப்பட்டாா்.
இந்த வழக்கில் இவரது சகோதரா்கள் மூவா் முன்பு கைது செய்யப்பட்ட நிலையில், இவா் மட்டும் கைது நடவடிக்கையை தவிா்க்க தலைமறைவாக இருந்து வந்தாா். இருப்பிடங்களை அடிக்கடி மாற்றி வந்த இவா் குறித்து குற்றப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், புராரியில் துணைக்கடை நடத்தி வந்த அவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். இவா் மீது 2011-இல் பதிவு செய்யப்பட்ட மற்றொரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś
தொடர்புடையது

பிகாா் கொலை வழக்கில் தொடா்புடையவா் தில்லியில் கைது

தில்லியில் தேடப்பட்டு வந்த பாலியல் குற்றவாளி கைது
கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி 9 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் கைது
தில்லியில் ஏடிஎம் மோசடி கும்பல் தலைவா் கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

