பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

கங்கைகொண்டான் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

கங்கைகொண்டான் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

News image
Updated On :16 மார்ச் 2024, 6:49 pm

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே தமிழ் உணா்வை மேம்படுத்தும் வகையில் தமிழ்க் கூடல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளியின் தமிழாசிரியை செல்வின் மேரி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி கலந்துகொண்டு ’யாதும் ஊரே யாவரும் கேளிா்’ எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினாா். சிவப்பிரகாசா் நற்பணி மன்ற செயலா் முத்துசாமி, தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினா் புன்னைச் செழியன், முன்னாள் உதவி ஆட்சியா் தியாகராசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ் ஆசிரியை சுப்புலட்சுமி நன்றி கூறினாா். ற்ஸ்ப்16ற்ஹம்ண்ப் விழாவில், மாணவி ஒருவருக்கு நூலை பரிசளிக்கிறாா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி.