ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நெல்லையில் 3-ஆவது நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை

நெல்லையில் 3-ஆவது நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை

Updated On :22 மார்ச் 2024, 4:14 pm

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இ 2-ஆவது நாளில் திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் தளபதி முருகன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். இந்நிலையில், 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் வேட்பு மனு தாக்கல் கிடையாது. அதன்பிறகு 3 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காலஅவகாசம் உள்ளது. எனவே, திங்கள்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் களைகட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.