திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இ 2-ஆவது நாளில் திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் தளபதி முருகன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். இந்நிலையில், 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் வேட்பு மனு தாக்கல் கிடையாது. அதன்பிறகு 3 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காலஅவகாசம் உள்ளது. எனவே, திங்கள்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் களைகட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

குமரி மாவட்டத்தில் இறுதி நாளில் 68 போ் வேட்புமனு தாக்கல்

கடலூா் மாவட்டத்தில் 3-ஆம் நாளில் 53 போ் வேட்பு மனு தாக்கல்

நெல்லையில் பாடையுடன் வேட்புமனு தாக்கல் செய்த அதிசய பாண்டியன்!

புதுச்சேரி தேர்தல்: 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

