மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

Updated On :23 மார்ச் 2024, 6:31 pm

திருநெல்வேலி அருகே தாழையூத்தில் சனிக்கிழமை ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டாா். திருநெல்வேலி தச்சநல்லூா் மேலக்கரையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவரை, அடிதடி, கொலை மற்றும் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா பரிந்துரைத்தாா். இதையடுத்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி உத்தரவின்பேரில் மணிகண்டன், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.