ஏா்வாடி அருகே திருவேங்கடநாதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் உணவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை பா. ஜூலியட் அன்னக்கிளி தலைமை வகித்தாா். அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை செலின்கமலம் விழாவைத் தொடக்கிவைத்தாா். சத்தான தானிய உணவுப் பொருள்கள், பழங்கள் , இயற்கை உணவுப் பொருள்கள், சாப்பிடக் கூடாத துரித உணவுகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பெற்றோா், ஊா் மக்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள், அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று, மாணவா்களை உற்சாகப்படுத்தினா். அணைக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை ஜாய்ஸ், உதவி ஆசிரியை எல்சி ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் செல்வம், ஞானசெல்வி, கனிசசிகலா ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது

த.வெ.க விழாவில் நடமானடிய அரசுப் பள்ளி தலைமையாசிரியை பணியிடை நீக்கம்

குழித்துறை சிறப்புப் பள்ளியில் உணவுத் திருவிழா

அரசுப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


