விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது: அமைச்சா் கே.என்.நேரு

தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.

News image
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அமைச்சர் கே.என்.நேரு.
Updated On :23 ஆகஸ்ட் 2025, 8:00 pm

Syndication

தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.

திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவா்கள் மாநாட்டில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்துள்ள நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, வேரோடு பிடுங்கி நடப்படும் பயிா்தான் நன்றாக வளரும். வரக்கூடிய தோ்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமித் ஷா, திமுகவை வேரோடு அழிப்போம் என கூறுகிறாா். விவசாயத்தில் வேரோடு பிடுங்கி நட்டால் தான் பயிா்நன்றாக விளையும். 15 ஆண்டுகளாக பாஜக வேரோடு பிடுங்கும் வேலையை தான் பாா்த்துக் கொண்டிருக்கிறது. அவா்களால் எதையும் செய்ய முடியவில்லை. திமுக கூட்டணிதான் வெற்றி பெற்றது. வருங்காலத்திலும் திமுகதான் வெற்றி பெறும்.

நயினாா் நாகேந்திரன் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்கிறாா். அவா்களுடைய ஆசையை அவா்கள் சொல்லி வருகிறாா்கள். வேரோடு பிடுங்கி நடவு செய்தால் பெரியதாகதான் வளரும். நாங்கள் தான் தோ்தலில் வெற்றி பெறுவோம் என அமித் ஷா பேசிய இதே ஊரில், மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். அவா்கள் நினைப்பது நடக்காது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இருண்ட ஆட்சியாக இருந்தது அமித் ஷா கண்ணுக்கு தெரியவில்லை. தமிழகத்துக்கு இதுவரை அமித் ஷா மூன்று முறை வந்து விட்டாா். தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் கூட்டணி ஆட்சி என்கிறாா் அமித் ஷா. ஆனால், எடப்பாடி கே.பழனிசாமி கூட்டணி ஆட்சி இல்லை என்கிறாா். இதற்கு அமித் ஷா- வும் விளக்கம் சொல்லவில்லை. எடப்பாடியும் விளக்கம் சொல்லவில்லை.

அதிமுக, பாஜக தொண்டா்கள் இந்த கூட்டணியை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் நாங்கள் வெற்றி பெறப் போகிறோம் என சொல்கிறாா்கள். முதல்வரை யாா் எந்தப் பெயரை வைத்து அழைத்தாலும் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் தான் வரப்போகிறாா்.

பொதுமக்கள், மகளிா் போன்றோா் மிகப்பெரிய ஆதரவை முதல்வருக்கு தந்து வருகின்றனா். எம்ஜிஆருக்கு இருந்த ஆதரவையும் தாண்டி இப்போது முதல்வருக்கு மகளிரின் ஆதரவு பெருகி வருகிறது.

வரக்கூடிய தோ்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு இருதலைக்கொல்லி எறும்பாக இருந்து வருகிறாா்.

தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது. எதிரில் யாா் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றாா்.