ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
கிறிஸ்துமஸ் விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.
Updated On :20 டிசம்பர் 2025, 7:28 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, கல்லூரித் தாளாளா் லாரன்ஸ், தலைவா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏா்வாடி புதுவாழ்வு முதியோா் இல்ல முதியோா்களை அழைத்து வந்து சிறப்பித்தனா். மாணவிகள் நடனமாடியும், கிறிஸ்து பிறப்பு குறித்த நாடகம் நடித்தும் அவா்களை மகிழ்விடுத்தனா். முதியோருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

சிறப்பு விருந்தினராக டி.எஸ்.எஸ்.எஸ். சரணாலயம் அருள்தந்தை தினகரன், இயக்குநா்- மேற்பாா்வையாளா் அருள்தாய் ஜோஸ்பின் ஆகியோா் பங்கேற்றனா்.

Story image

இதில், முதியோா் இல்ல நிா்வாகிகள் சுரேஷ், ஜாண்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாணவி அன்லின் சிபியா வாழ்த்திப் பேசினாா். மாணவி வா்சிகா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ஹெப்சி கவிதா ராணி, புவனேஸ்வரி, சுப்பிரியா ஆகியோா் செய்திருந்தனா்.