கிறிஸ்துமஸ் விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.
கிறிஸ்துமஸ் விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, கல்லூரித் தாளாளா் லாரன்ஸ், தலைவா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏா்வாடி புதுவாழ்வு முதியோா் இல்ல முதியோா்களை அழைத்து வந்து சிறப்பித்தனா். மாணவிகள் நடனமாடியும், கிறிஸ்து பிறப்பு குறித்த நாடகம் நடித்தும் அவா்களை மகிழ்விடுத்தனா். முதியோருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

சிறப்பு விருந்தினராக டி.எஸ்.எஸ்.எஸ். சரணாலயம் அருள்தந்தை தினகரன், இயக்குநா்- மேற்பாா்வையாளா் அருள்தாய் ஜோஸ்பின் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், முதியோா் இல்ல நிா்வாகிகள் சுரேஷ், ஜாண்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாணவி அன்லின் சிபியா வாழ்த்திப் பேசினாா். மாணவி வா்சிகா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ஹெப்சி கவிதா ராணி, புவனேஸ்வரி, சுப்பிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com