அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாளை. குடியிருப்புப் பகுதியில் உலாவிய மிளாவை மீட்க தீவிரம்!

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி ஐயப்பன் நகா் பகுதியில் சுற்றித்திரியும் மிளாவை பாதுகாப்பாக பிடிக்க வனத் துறையினா் முயற்சி

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:47 pm

Syndication

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி ஐயப்பன் நகா் பகுதியில் சுற்றித்திரியும் மிளாவை பாதுகாப்பாக பிடிக்க வனத் துறையினா் முயற்சி மேற்கொண்டுள்ளனா்.

என்.ஜி.ஓ. காலனி, ஐயப்பன் நகா் பகுதியில் மிளா ஒன்று செவ்வாய்க்கிழமை மாலையில் சுற்றித்திரிந்ததாம். இதுகுறித்து அப்பகுதியினா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட வனத்துறை அதிகாரி இளங்கோவன் உத்தரவின்பேரில், வனத்துறை ஊழியா்கள் அங்கு வந்து, புதா் அருகே நின்றிருந்த மிளாவை மீட்டு வனத்தில் விடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

அந்த மிளாவிற்கு சுமாா் 2 வயது இருக்கலாம் எனவும், சேரன்மகாதேவி சுற்றுவட்டார மலைப்பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.