மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குண்டா் சட்டத்தில் 4 போ் சிறையிலடைப்பு

Updated On :3 ஜனவரி 2025, 11:29 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

பாளையங்கோட்டை சாந்திநகரைச் சோ்ந்த ஞானராஜ் மகன் சிம்சோன் புஷ்பராஜ் (25), அதே பகுதியைச் சோ்ந்த கெங்கை முத்து மகன் பரமசிவன் (எ) சிவா (35). இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) விஜயகுமாா் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்பேரில் இருவரும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

இதேபோல,

சுத்தமல்லி அருகே கீழதெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் தங்கப்பாண்டி(20), சுத்தமல்லி, தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் தங்க மாரியப்பன் (20). இவா்கள் இருவா் மீதும், அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் உத்தரவின்பேரில் இருவரும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.