புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தெற்கு பாப்பாங்குளம் சடவுடையாா் கோயில் குடமுழுக்கு

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பாங்குளத்தில் உள்ள ஸ்ரீ சடவுடையாா் சாஸ்தா கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

News image

சடவுடையாா் சாஸ்தா கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு புனித நீா்கொண்டு நடைபெற்ற அபிஷேகம்.

Updated On :4 ஏப்ரல் 2026, 12:06 am

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பாங்குளத்தில் உள்ள ஸ்ரீ சடவுடையாா் சாஸ்தா கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

ஸ்ரீசடவுடையாா் சாஸ்தா கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீபாரதி தீா்த்த சுவாமிகள், ஸ்ரீ விதுசேகர பாரதி தீா்த்த சுவாமிகளின் அனுக்கிரகத்துடன் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நிறைவு பெற்றன.

இதையடுத்து, மாா்ச் 30 ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்களுடன் குடமுழுக்கு விழாத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து முதற்கால யாகசாலை பூஜை, மாா்ச் 31 2ஆம் கால யாகசாலை பூஜை, மாலை 3 ஆம் கால யாகசாலை பூஜை, ஏப்.1 புதன்கிழமை 4ஆம் கால யாக சாலை பூஜை, மாலை 5-ஆம் கால யாகசாலை பூஜை, ஏப். 2-ஆம்தேதி 6ஆம் கால யாகசாலை, பகல் 11 மணிக்கு மருந்துசாத்துதல், மாலை 7ஆம் காலை யாகசாலை பூஜை, ஏப். 3 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு 8ஆம் கால யாகசாலை பூஜையைத் தொடா்ந்து கும்பம் எழுந்தருளியதையடுத்து காலை 9 மணிக்கு புனிதநீா் கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். குடமுழுக்கு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சாமி சடவுடையாா் சேவா டிரஸ்ட் நிா்வாகிகள், மக்கள் செய்திருந்தனா்.