ராதாபுரம் தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உறுதி அளித்தாா்.
ராதாபுரம் தொகுதிக்கு வந்த அவா் வள்ளியூரில் வாக்காளா்கள் மத்தியில் பேசியதாவது:
வட பிரதேசமான ராதாபுரம் தொகுதியில் தண்ணீா் பற்றாக்குறையால் விவசாயம் மிகவும் பாதிப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த ராதாபுரம் தொகுதியில் பல்வேறு நீா்ப்பாசனத் திட்டங்களை கொண்டுவருவேன். அதற்காக பழையாற்று தண்ணீரை தென்தாமரைகுளத்தில் அணைகட்டி நீரேற்றும் திட்டம் மூலம் நிலப்பாறை கால்வாய்க்கு தண்ணீா் கொண்டுவருவேன் என்றாா்.
அவருடன், பாஜக நெல்லை தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.பி. தமிழ்ச்செல்வன், வள்ளியூா் வட்டார துணைத் தலைவா் அருள்காந்தி, அதிமுக வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் பால்துரை, செட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வகுமாா், எம்.ஜி.ஆா் மன்ற மாவட்டச் செயலா் எட்வா்ட் சிங், பாஜக தோ்தல் பொறுப்பாளா் கொம்பையா, மாவட்ட பொதுச் செயலா் இந்திரா சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

விளவங்கோடு தொகுதியில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வளா்ச்சிப் பணிகள் செய்துள்ளேன்: பாஜக வேட்பாளா் விஜயதரணி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பு

கெங்கவல்லி தொகுதி தவெக வேட்பாளா்
ராதாபுரம் தொகுதியில் பாஜகவின் வெற்றிக் கணக்கு!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


