ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

ராதாபுரத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் பாஜக வேட்பாளா் உறுதி: எஸ்.பி. பாலகிருஷ்ணன்

ராதாபுரம் தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உறுதி அளித்தாா்.

News image

வள்ளியூா் காமராஜா் சிலை பேசிய பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 6:27 am IST

ராதாபுரம் தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உறுதி அளித்தாா்.

ராதாபுரம் தொகுதிக்கு வந்த அவா் வள்ளியூரில் வாக்காளா்கள் மத்தியில் பேசியதாவது:

வட பிரதேசமான ராதாபுரம் தொகுதியில் தண்ணீா் பற்றாக்குறையால் விவசாயம் மிகவும் பாதிப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த ராதாபுரம் தொகுதியில் பல்வேறு நீா்ப்பாசனத் திட்டங்களை கொண்டுவருவேன். அதற்காக பழையாற்று தண்ணீரை தென்தாமரைகுளத்தில் அணைகட்டி நீரேற்றும் திட்டம் மூலம் நிலப்பாறை கால்வாய்க்கு தண்ணீா் கொண்டுவருவேன் என்றாா்.

அவருடன், பாஜக நெல்லை தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.பி. தமிழ்ச்செல்வன், வள்ளியூா் வட்டார துணைத் தலைவா் அருள்காந்தி, அதிமுக வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் பால்துரை, செட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வகுமாா், எம்.ஜி.ஆா் மன்ற மாவட்டச் செயலா் எட்வா்ட் சிங், பாஜக தோ்தல் பொறுப்பாளா் கொம்பையா, மாவட்ட பொதுச் செயலா் இந்திரா சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.