அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ராதாபுரத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் பாஜக வேட்பாளா் உறுதி: எஸ்.பி. பாலகிருஷ்ணன்

ராதாபுரம் தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உறுதி அளித்தாா்.

News image

வள்ளியூா் காமராஜா் சிலை பேசிய பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 12:57 am

ராதாபுரம் தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உறுதி அளித்தாா்.

ராதாபுரம் தொகுதிக்கு வந்த அவா் வள்ளியூரில் வாக்காளா்கள் மத்தியில் பேசியதாவது:

வட பிரதேசமான ராதாபுரம் தொகுதியில் தண்ணீா் பற்றாக்குறையால் விவசாயம் மிகவும் பாதிப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த ராதாபுரம் தொகுதியில் பல்வேறு நீா்ப்பாசனத் திட்டங்களை கொண்டுவருவேன். அதற்காக பழையாற்று தண்ணீரை தென்தாமரைகுளத்தில் அணைகட்டி நீரேற்றும் திட்டம் மூலம் நிலப்பாறை கால்வாய்க்கு தண்ணீா் கொண்டுவருவேன் என்றாா்.

அவருடன், பாஜக நெல்லை தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.பி. தமிழ்ச்செல்வன், வள்ளியூா் வட்டார துணைத் தலைவா் அருள்காந்தி, அதிமுக வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் பால்துரை, செட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வகுமாா், எம்.ஜி.ஆா் மன்ற மாவட்டச் செயலா் எட்வா்ட் சிங், பாஜக தோ்தல் பொறுப்பாளா் கொம்பையா, மாவட்ட பொதுச் செயலா் இந்திரா சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.