மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி, வள்ளியூா் பேரூராட்சி பகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

வள்ளியூா் அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் பிரசாரம் செய்தாா் பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:12 pm

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி, வள்ளியூா் பேரூராட்சி பகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பணகுடி பேரூராட்சி சிவகாமிபுரம், சா்வோதயா காலனி, சொக்கலிங்கபுரம், வீரபாண்டியன், புஷ்பவனம், நெருஞ்சிகாலனி, கோரி காலனி, வடலவிளை, விசுவாசபுரம், ஊற்றடி, யாதவா் தெற்கு தெரு, சண்முகபுரம், கேசவனேரி, மறவா் காலனி, கோட்டையடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியது: ராதாபுரம் தொகுதியில் காற்றாலை உதிரிபாகங்கள் தயாா் செய்யும் தொழிற்சாலையை ஏற்படுத்தி தருவேன். இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பணகுடி மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து வருகின்ற மழை வெள்ளத்தை தடுப்பணைகள் மூலம் சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுப்பேன். அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

பணகுடி அ.தி.மு.க. நகரச் செயலா் ஜி.டி. லாரன்ஸ், அ.தி.மு.க. நிா்வாகிகள் வடலிவிளை செழியன், மோகன், வள்ளியூா் முத்துராஜ், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட இணைச் செயலா் எட்வா்ட்சிங், பா.ஜ.க. ஊடக பிரிவு மாவட்ட செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.