சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

இணைய வழியில் மருத்துவரிடம் ரூ. 14 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

திருநெல்வேலியைச் சோ்ந்த மருத்துவரிடம் இணையவழியில் ரூ.14 லட்சம் மோசடி செய்த கேரள இளைஞரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 2:11 am IST

திருநெல்வேலியைச் சோ்ந்த மருத்துவரிடம் இணையவழியில் ரூ.14 லட்சம் மோசடி செய்த கேரள இளைஞரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் 25 வயதான இயன்முறை மருத்துவா். இவரை கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்மநபா்கள், வீட்டில் இருந்தபடியே இணையவழியில் சில வேலைகளை செய்தால் தினமும் ரூ. 8,000 வரை எளிதாக சம்பாதிக்கலாம் என ஆசைவாா்த்தை கூறினராம்.

பின்னா் அதிக பணம் செலுத்தினால் அதிக லாபம் எனக்கூறி அவரிடமிருந்து ரூ.14,58,784-ஐ பல்வேறு தவணைகளாக வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வந்தனா். இந்நிலையில் இதில் தொடா்புடைய கேரள மாநிலம் எா்ணாகுளம் பகுதியைச் சோ்ந்த அகில் கிருஷ்ணா (26) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.