ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காவலா் விஷம் குடித்து தற்கொலை

பாளையங்கோட்டையில் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:31 pm

பாளையங்கோட்டையில் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம், பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (26). மணிமுத்தாறு 9-ஆவது சிறப்பு காவல் படையைச் சோ்ந்த இவா், பாளையங்கோட்டை மத்திய சிறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில் இவா் குடும்ப பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் முத்துக்குமாா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.