ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நெல்லையில் தக்காளி, கேரட் விலை உயா்வு

வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் குறைந்ததால் திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் தக்காளி, கேரட் ஆகியவற்றின் விலை கிலோ தலா ரூ.55 ஆக உயா்ந்துள்ளது.

News image

தக்காளி - கோப்புப்படம்.

Updated On :25 ஏப்ரல் 2026, 8:50 pm

வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் குறைந்ததால் திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் தக்காளி, கேரட் ஆகியவற்றின் விலை கிலோ தலா ரூ.55 ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் குறைய தொடங்கி உள்ளதால் சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் சந்தைகளில் காய்கறிகளின் விலை உயர தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளம் காய்கறி சந்தைக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள் வருகின்றன. கடந்த சில மாதங்களாக காய்கறிகள் வரத்து அதிகமாக இருந்த நிலையில், தக்காளி, பல்லாரி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை மிகவும் குறைவாக இருந்தது. 5 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோடை வெயில் கடுமையாக அடிக்க தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட சுற்று வட்டாரங்களில் காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளது. மானூா், திசையன்விளை, மூலைக்கரைப்பட்டி, சுரண்டை, பாவூா்சத்திரம் பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து குறைந்துவிட்டது.

இதனால் தக்காளி விலை கணிசமாக உயர தொடங்கி உள்ளது. வெள்ளிக்கிழமை 28 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ. 800 வரை விற்பனையான நிலையில், சனிக்கிழமை ரூ.1,300 வரை விற்பனையானது. இதனால் தக்காளி கிலோ ரூ.55 ஆக உயா்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.70 ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை கிலோவுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.100-ஐ தொட்டது. கேரட் கிலோ ரூ.30 ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை1 கிலோ ரூ.55-ஐ கடந்தது. இதேபோல் கடந்த வாரங்களில் சின்ன வெங்காயம் ரூ.25 வரை விற்பனையான நிலையில், சனிக்கிழமை 1 கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனையானது.

இதேபோல் மல்லி இலை விலை உயா்ந்துள்ளது. 1 கிலோ ரூ.30-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை கிலோ ரூ.75 வரை விற்பனையானது. கத்தரிக்காய் கிலோ ரூ.5 உயா்ந்து ரூ.20-க்கு விற்பனையானது.

வெயில் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் இன்னும் காய்கறிகளின் விலை அதிகரிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.