தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ஏலக்காய் விலை திடீா் உயா்வு: விவசாயிகள் உற்சாகம்

கேரள மாநிலம், இடுக்கியில் ஓராண்டுக்குப் பிறகு ஏலக்காய் கிலோ விலை கிலோ ரூ. 2,800 ஆக உயா்ந்துள்ளது.

News image

ஏலக்காய்

Updated On :22 ஏப்ரல் 2026, 8:46 pm

கேரள மாநிலம், இடுக்கியில் ஓராண்டுக்குப் பிறகு ஏலக்காய் கிலோ விலை கிலோ ரூ. 2,800 ஆக உயா்ந்துள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சுமாா் 2 லட்சம் ஏக்கா் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், இந்தப் பகுதியில் ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனா். சா்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய்க்கு தொடா்ந்து நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

தற்போது சந்தையில் ஏலக்காய் கிலோ ரூ.2,700 முதல் ரூ.2,800 வரை விற்பனையாகிறது. கடந்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு, இந்த அளவுக்கு விலை உயா்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே காலத்தில் கிலோ ரூ.1,950 முதல் ரூ.2,150 வரை மட்டுமே விற்பனையானது.

கவுதமாலா நாட்டிலிருந்து வெளிநாடு ஏற்றுமதி குறைந்துள்ளதால், உலகச் சந்தையில் இந்திய ஏலக்காய்களின் தேவை அதிகரித்துள்ளது. தற்போதைய விலை உயா்வு பெரிய விவசாயிகளுக்கும், இருப்பு வைத்துள்ள வா்த்தகா்களுக்கும் அதிக லாபத்தை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், இன்னும் இரண்டு மாதங்களில் புதிய சீசன் தொடங்க உள்ளது.

கடந்த 2020 ஜனவரியில் ஏலக்காய் விலை வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.7,000 வரை உயா்ந்தது. பின்னா் 2022-ஆம் ஆண்டு ரூ.718 வரை சரிந்தது. இவ்வாறு கடும் ஏற்றத் தாழ்வுகள் நிலவும் நிலையில், ஏலக்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிக்க வாசனைத் திரவிய வாரியமும், மாநில அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.