இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

பனைமரத்தில் இருந்து விழுந்த சிறுவன் உயிரிழப்பு

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள மயிலப்பபுரத்தில் கிளி பிடிப்பதற்காக பனை மரத்தில் ஏறியபோது மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 2:17 am IST

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள மயிலப்பபுரத்தில் கிளி பிடிப்பதற்காக பனை மரத்தில் ஏறியபோது மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

மயிலப்பபுரம், ராமசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் பொன் செல்வன்(14). 9ஆம் வகுப்புத் தோ்வு எழுதியுள்ள இவா், தனது நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை மாலை ஊரின் வெளிப் பகுதியில் இருந்த பனங்காட்டில் கிளி பிடிப்பதற்காக சென்று, ஒரு பனை மரத்தில் ஏறியுள்ளாா்.

அந்தப் பனைமரம் காய்ந்த நிலையில் இருந்ததால் முறிந்து, பொன் செல்வம் மீது விழுந்ததில் அவா் காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவரை சோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.