சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பனைமரத்தில் இருந்து விழுந்த சிறுவன் உயிரிழப்பு

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள மயிலப்பபுரத்தில் கிளி பிடிப்பதற்காக பனை மரத்தில் ஏறியபோது மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 8:47 pm

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள மயிலப்பபுரத்தில் கிளி பிடிப்பதற்காக பனை மரத்தில் ஏறியபோது மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

மயிலப்பபுரம், ராமசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் பொன் செல்வன்(14). 9ஆம் வகுப்புத் தோ்வு எழுதியுள்ள இவா், தனது நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை மாலை ஊரின் வெளிப் பகுதியில் இருந்த பனங்காட்டில் கிளி பிடிப்பதற்காக சென்று, ஒரு பனை மரத்தில் ஏறியுள்ளாா்.

அந்தப் பனைமரம் காய்ந்த நிலையில் இருந்ததால் முறிந்து, பொன் செல்வம் மீது விழுந்ததில் அவா் காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவரை சோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.