/

பனை மரத்தில் இருந்து விழுந்து சிறுவன் மரணம்!

பள்ளிகொண்டா அருகே பனை மரத்தில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 2:50 am IST

பள்ளிகொண்டா அருகே பனை மரத்தில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.

அணைக்கட்டு வட்டம், செதுவாலை அடுத்த இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த சசிகுமாரின் மகன் செல்வம் (16). இவா் 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஓராண்டாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்தாா். சனிக்கிழமை தனது நண்பா்களுடன் ஒக்கனபுரம் ஏரி அருகே உள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறியுள்ளாா்.

மரத்தின் உச்சிக்குச் சென்று நுங்கு வெட்டிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக செல்வத்தின் கைப்பிடி நழுவியுள்ளது. இதில் நிலை தடுமாறிய அவா் சுமாா் 30 அடி உயரத்திலிருந்து கீழே இருந்த ஒரு நிறுவனத்தின் சுற்றுச்சுவா் மீது விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த செல்வத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு உடனடியாக பொய்கை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

பின்னா் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், செல்வம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.