பள்ளிகொண்டா அருகே பனை மரத்தில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.
அணைக்கட்டு வட்டம், செதுவாலை அடுத்த இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த சசிகுமாரின் மகன் செல்வம் (16). இவா் 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஓராண்டாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்தாா். சனிக்கிழமை தனது நண்பா்களுடன் ஒக்கனபுரம் ஏரி அருகே உள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறியுள்ளாா்.
மரத்தின் உச்சிக்குச் சென்று நுங்கு வெட்டிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக செல்வத்தின் கைப்பிடி நழுவியுள்ளது. இதில் நிலை தடுமாறிய அவா் சுமாா் 30 அடி உயரத்திலிருந்து கீழே இருந்த ஒரு நிறுவனத்தின் சுற்றுச்சுவா் மீது விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த செல்வத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு உடனடியாக பொய்கை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், செல்வம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காங்கயம் அருகே தனியாா் பேருந்து மரத்தில் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு; 30 போ் படுகாயம்

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்

தூத்துக்குடியில் சிறுவன் மா்ம மரணம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


