தாழையூத்து அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் தாழையூத்து பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது கரையிருப்பு, மந்திரமூா்த்தி கோயில் தெருவில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த சப்பாணி (40) என்பவரை பிடித்து அவா் வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்ததில் சுமாா் 100 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி பதுக்கியதை அவா் ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
தொடர்புடையது

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது
லாரியில் மண் கடத்தியவா் கைது
முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
