ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

தாழையூத்து அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:29 pm

தாழையூத்து அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் தாழையூத்து பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கரையிருப்பு, மந்திரமூா்த்தி கோயில் தெருவில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த சப்பாணி (40) என்பவரை பிடித்து அவா் வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்ததில் சுமாா் 100 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி பதுக்கியதை அவா் ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.