மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கூடங்குளம் 1ஆவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 11:27 pm

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகா வாட் திறன் கொண்ட 2 அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் 3-வது அணுஉலைக்கான கட்டுமானப்பணிகள் முடிவடைந்து மின்உற்பத்தி செய்வதற்கான பிரதான பணிகள் நடைபெற்று வருகிறது. 4, 5,6 அணுஉலைகளுக்கான கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. மேலும், தொழில்நுட்ப கோளாறை சீரமைக்கும் பணியில் அணுவிஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநா்களும் ஈடுபட்டு வருகின்றனா்; விரைவில் பழுது நீக்கப்பட்டு மின்உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின்நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா்.

முதலாவது அணுஉலை இயங்காததால் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வந்த 576 மெகாவாட் மின்சாரத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது.