கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்திய ரஷிய நாட்டின் உதவியுடன் தலா இரண்டு அணு உலைகள் மூலம் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இரண்டு அணு உலைகளிலிருந்தும் மொத்தமாக 1152 மெகாவாட் மின் உற்பத்தி தமிழகத்திற்குக் கிடைக்கிறது. இதன் விளைவாக, அந்த அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 576 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
அணு உலையின் கண்டன்சர் குளிரூட்டும் நீர் இறைப்பானில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது .ஏற்கெனவே, தமிழ்நாட்டில் ஒரு நாள் மின் தேவை 19 ஆயிரம் மெகா வாட்டாக இருந்து வருகிறது. கோடைக்காலத்தில் மின் சாதனங்களில் பயன்பாடு அதிகரிப்பின் காரணமாக நாள் ஒன்றிய மின்சார தேவை 21,000 மெகாவாட்டாக எட்ட இருக்கும் நிலையில் தற்பொழுது கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தடைப்பட்டது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்தப் பழுதை விரைந்து சரிசெய்யும் பணிகளில் கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Summary
Power generation at the Koodankulam Nuclear Power Plant has been temporarily halted due to a sudden technical glitch in its first reactor.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின் தடை வெறும் தடையல்ல.. மக்களின் அன்றாட ஓட்டத்துக்கு போடும் பிரேக்!

அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்கள்: அச்சத்தைப் போக்க முயற்சிக்கப்படும்- உச்சநீதிமன்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்! மீண்டும் போர்?







