திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை நெதர்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி! தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்! மீண்டும் போர்?

ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையம் அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து...

News image

ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்... - கோப்புப் படம் | ANI

Updated On :1 மணி நேரம் முன்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பயங்கர தீ ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியின் அல் தாஃப்ரா பகுதியில் அமைந்துள்ள பராகாஹ் அணுமின் நிலையத்தின் அருகில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) காலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி, ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் வெளியிட்ட செய்தியில், தாக்குதலால் அப்பகுதியில் பயங்கர தீ ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அணுமின் நிலையத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், உயிரிழப்புகள் மற்றும் கதிர்வீச்சு ஆகியவை ஏற்படவில்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு, யார் மீதும் அமீரகத்தின் அதிகாரிகள் குற்றம்சாட்டவில்லை. மேலும், அபுதாபியின் பாலைவனத்தில் அமைந்துள்ள இந்த அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியான ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அமைதி ஒப்பந்தத்துக்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. இதனால், ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டும், ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியும் தங்களின் எதிர்ப்பை வெளிகாட்டி வருகின்றன.

இந்தச் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெறுவதால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

massive fire broke out near a nuclear power plant in the United Arab Emirates following a drone attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.