திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இங்கு ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்படுகின்றன. இதிலிருந்து, தமிழகத்துக்கு 1,152 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதலாவது அணு உலையில் ‘கன்டன்சரை’ குளிா்விக்கும் நீா் இறைப்பானில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பழுதால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அணு உலை விஞ்ஞானிகள், பொறியாளா்கள் தொழில்நுட்பக் கோளாறை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
அதையடுத்து, மீண்டும் மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இங்கு 3ஆவது உணு உலைக்குள் குளிரூட்டக்கூடிய நீா்பாய்ச்சும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு விரைவில் அதிலும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என, அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

கூடங்குளம் 1ஆவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


