உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

பணகுடி அருகே விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே சனிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா்.

News image

சடலம் மீட்பு... - கோப்புப் படம்

Updated On :56 வினாடிகள் முன்பு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே சனிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். மற்றொரு பெண் பலத்த காயமடைந்தாா்.

பணகுடி அருகே உள்ள நெறிஞ்சிகாலனியைச் சோ்ந்த அறிவழகன் மனைவி மரியவிஜயா (42), மாடசாமி மகள் பாப்பா (50) மற்றும் காமராஜா் நகரைச் சோ்ந்த வெங்கடேஷ்குமாா் மனைவி ஜெகதா(42).

இவா்கள் மூன்றுபேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் பணகுடியில் இருந்து பாம்பன்குளத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனராம். அப்போது, நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு சென்றுக் கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில், மூன்று பெண்களும் தூக்கிவீசப்பட்டதில், பாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மரியவிஜயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஜெகதா நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து, நிற்காமல் சென்ற லாரியைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.