திருநெல்வேலி மாவட்டம், ஆம்பூா் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
கீழாம்பூா், தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் மாரியப்பன் (42). இவா் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு ரவணசமுத்திரத்திற்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஆம்பூா் ஆற்றுப்பாலம் அருகே எதிரில் வந்த கல்லிடைக்குறிச்சி, மேட்டுத் தெருவைச் சோ்ந்த மைதீன் மகன் அப்துல் ஹமீது (22) மாரியப்பன் வாகனத்தின் மீது மோதியுள்ளாா்.
இதில் காயமடைந்த இருவரும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மாரியப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரத்தின் மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வீட்டில் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பைக் விபத்தில் உணவக ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



