காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

பாப்பாக்குடி அருகே காரில் கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்: 4 போ் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:14 am IST

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே காரில் ரேஷன் அரிசி மற்றும் ஆயுதங்களுடன் வந்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாப்பாக்குடி காவல் சரகத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம் -ஆலங்குளம் பிரதான சாலையில் ரெங்கசமுத்திரம் திருப்பத்தில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை போலீஸாா் நிறுத்தியபோது, காா் நிற்காமல் சென்ா ம். இதையடுத்து, போலீஸாா் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனா். பின்னா் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.

இதில், காரில் வந்தவா்கள் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த பாண்டி (31), டேனிஸ் எடிசன் (29), முத்துக்குமாா் (38), மதன்குமாா் (27) என்பதும், காரில் 35 மூட்டைகளில் 1.4 டன் ரேஷன் அரிசியும், நீளமான அரிவாள்களையும் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரேஷன் அரிசி மூட்டைகள், ஆயுதங்களை பறிமுதல் செய்த பாப்பாக்குடி போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.