மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருநெல்வேலி
கூடங்குளம் பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 3) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னாா்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையாா்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ்மண்டபம் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
இத்தகவலை வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன்அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

