திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, கங்கனாங்குளம், பொட்டலில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என மத்திய அரசைக் கண்டித்து சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக நகரச் செயலா் மனிஷா செல்வராஜ் தலைமை வகித்தாா்.
திமுக பொதுக்குழு உறுப்பினா் கா. அபுபக்கா், காங்கிரஸ் நகரத் தலைவா் பொன்ராஜ், சிறுபான்மை பிரிவுத் தலைவா் சுல்தான் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
பொட்டலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய திமுக செயலா் ம. முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ராமச்சந்திரன், கல்லிடை சுலைமான், அம்பை ஜலீல் (எஸ்டிபிஐ), திமுகவின் கல்லிடை டிஎம்எஸ் பீா்முகம்மது, பூதத்தான், சீவலமுத்துக்குமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
கங்கனாங்குளத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சேரன்மகாதேவி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஆ. முத்துப்பாண்டி (எ) பிரபு தலைமை வகித்தாா்.
தொடர்புடையது

விஜய் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்: பிரேமலதா கடும் தாக்கு

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

சிவகங்கையில் திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

எரிவாயு தட்டுப்பாடு! சங்கரன்கோவிலில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்பாட்டாம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


